search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மா சுப்பிரமணியன்"

    • தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • 6 சட்ட மன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    சென்னை:

    தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் முனைவர். த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, தொகுதியில் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை த.வேலு தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், சைதாப் பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், தியாகராயர் நகர், மயிலாப்பூர் ஆகிய 6 சட்ட மன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளான, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, ஆம் ஆத்மி மற்றும் பல்வேறு தோழமைக் கட்சி களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    தொகுதியில் வீதி வீதியாக இல்லம் தோறும் சென்று வாக்குகள் சேகரித்து, திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அனைத்து பணிகளையும் செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    நிறைவாக கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிர மணியன், "தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழச்சி தங்கபாண்டியன் மிகச் சிறப்பாக பணியாற்றி உள்ளார். நாடாளுமன்றத்தில் தொகுதியின் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த பெண்களின் உரிமைக் குரலாக ஒலித்திருக்கிறார். கழகத் தோழர்கள், தோழமைக் இயக்கத் தோழர்களின் எழுச்சியை பார்க்கும் போது நமது வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்றார்.

    • திராவிட மாடல் ஆட்சி பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
    • 2019-ல் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு என்று முடிவு எடுக்கப்பட்ட 224 ஏக்கர் நிலப்பரப்புக்கு உரிய ஆவணங்கள் 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறிய தாவது-

    பஞ்சு மிட்டாயில் கலக்கப்பட்ட வண்ண கலவை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்து புதுவை அரசு தடை விதித்தது. அந்த செய்தியை பார்த்த பிறகு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்கள் ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

    அப்போது, அதில் புற்று நோய் பாதிப்பை உண்டாக்கும் வேதி கலவை இருப்பது கண்டறியப்பட்டது. உடனே தமிழக முதல்- அமைச்சர் அறிவுறுத்தலோடு வண்ண கலவை இருக்கிற பஞ்சு மிட்டாய்க்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெண்மை நிறுத்தில் உள்ள பஞ்சு மிட்டாய்க்கு தடையில்லை.

    திராவிட மாடல் ஆட்சி பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அதே அமைச்சர்தான் பாராளு மன்றத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர காலதாமதம் ஏன் என்ற கேள்விக்கு தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்து தர வில்லை என தெரிவித்தார்.

    2019-ல் பிரதர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது, அடிக்கல் நாட்ட பிரதமரை அழைத்து வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. நிலஆர்ஜிதம் செய்யப்படாத யாருக்கோ சொந்தமான இடத்தில் பிரதமர் எப்படி வந்து அடிக்கல் நாட்டுவார்?. அல்லது வேறு யாருக்கோ சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்ட பிரதமர் ஒரு மாநில முதல்வர் எப்படி அழைத்து வருவார் என அன்றே நான் கேள்வி எழுப்பினேன்.

    நில ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டி இருந்தால் முதல் குற்றவாளி எடப்படி பழனிச்சாமி. அது தெரியாமல் பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி இருந்தால் அவரும் தவறுக்கு உரியவர். நிதி பெற்று தருவதில் காலதாமதம் ஏற்பட்டது என்ற உண்மையான காரணத்தை கூறி இருக்கலாம். உண்மையான காரணத்தை கூறாமல், நில ஆர்ஜிதம் செய்யப்பட வில்லை என்றார். இதற்கான ஆதாரங்களை நான் சமர்ப்பித்துள்ளேன்.

    2019-ல் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு என்று முடிவு எடுக்கப்பட்ட 224 ஏக்கர் நிலப்பரப்புக்கு உரிய ஆவணங்கள் 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த தகவல் எல்லாம் தெரிந்த பிறகு கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள நிதி அமைச்சர் நில ஆர்ஜிதம் செய்து தராததால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அவரிடம் புதுவை எம்.பி. தொகுதியில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் யார் போட்டியிடுவார்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்று அவர் தெரிவித்தார்.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் கன்னியாகுமரி வந்தார்.
    • தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார்.

    கன்னியாகுமரி:

    தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். அங்கு வந்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு அங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் இருந்து காணிமடம் வரை உள்ள 21.4 கிலோ மீட்டர் தூரம் நடந்த தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். அவருடன் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு ஓடினார்.

    கன்னியாகுமரியில் நடந்த இந்த மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் 148-வது முறையாக ஓடி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அங்கு சிக்கியவர்களுக்கும், சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 4 மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 190 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திலும், நேற்று நெல்லை அரசு மருத்துவ மனையில் வெள்ளம் புகுந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்த பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.


    இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் இன்று தனியார் மருத்துவ மனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் கீதா மெட்ரிக் பள்ளி, டி.எம்.சி. காலனி, கோரம்பள்ளம், முத்தையாபுரம், புன்னக் காயல், முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், ஏரல் பஸ் நிலையம், ஏரல் காந்தி சிலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்களில் 31 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் ஒரு நாளைக்கு 3 இடங்களுக்கு சென்று முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் 93 இடங்களில் முகாம் நடக்கிறது. இதேபோல் 4 பேர் கொண்ட ஒரு மருத்துவ குழுவும் தினமும் 3 இடங்களுக்கு சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதன் மூலம் 12 பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இன்று நெல்லை மாவட்டத்தில் மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்காக 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. நெல்லை மாநகர பகுதிகளில் 4 குழுக்களும், புறநகர் மாவட்ட பகுதிகளில் ஒரு குழுவும் சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    • சென்னையில் வெள்ளத் தடுப்பு தொடர்பான கட்டமைப்புகளை அரசு முறையாக செய்துள்ளது.
    • மழை பாதிப்பில் இருந்து மீண்டு வர போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    சென்னை:

    புயல், மழை வெள்ளத்தில் சிக்கி தலைநகர் சென்னை தத்தளித்தது. இன்னும் முழு அளவில் மக்கள் இயல்பு நிலைக்கு மீளவில்லை.

    கடந்த 8 ஆண்டுகளில் 3 பெரு வெள்ளத்தை சென்னை மக்கள் சந்தித்து பெரும் துயரை அனுபவித்து உள்ளார்கள். வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக பல கோடிகளை செலவிட்டு உள்ளதாக அரசு கூறினாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடுமையாக அரசை குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் நடை பெறும் 3000 மழைக்கால மருத்துவ முகாமில் சென்னையில் நடைபெற்ற முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.


    அப்போது அவரிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    சென்னையில் வெள்ளத் தடுப்பு தொடர்பான கட்டமைப்புகளை அரசு முறையாக செய்துள்ளது. இதில் நாங்கள் செய்தது தான் சரி. 20 செ.மீட்டர் மழையை தாங்கும் அளவுக்கு கட்டமைப்புகள் வலுவாக இருக்கிறது. ஆனால் ஒரே நாளில் 50 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. அது மட்டுமல்ல 4-ந்தேதி அடையாறு முகத்துவாரத்தை நேரில் பார்த்தேன். மழை தண்ணீரை கடல் உள்வாங்கவில்லை.

    மழை பாதிப்பில் இருந்து மீண்டு வர போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    வெள்ளத்தடுப்பு பணிகளில் தி.மு.க. அரசு எதிலும் கோட்டை விடவில்லை. எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்பட யாருடனும் நான் நேரில் விவாதிக்க தயாராக உள்ளேன். அவர்கள் தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 48 மணி நேரத்தில் மீட்கப்படும் இவர்களுக்கு 81 விதமான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.
    • திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் விபத்துக்களில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை விரைந்து மீட்டு சிகிச்சை அளிக்க இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல் மருவத்தூரில் தொடங்கி வைத்தார்.

    இதன்படி மீட்கப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்படுபவர்களுக்கு உடனடியாக ரூ.1 லட்சம் நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க 237 அரசு மற்றும் 455 தனியார் என 692 ஆஸ்பத்திரிகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. 48 மணி நேரத்தில் மீட்கப்படும் இவர்களுக்கு 81 விதமான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். 2 லட்சமாவது பயனாளி குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கிறார். அவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். அவருடன் சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடியும் சென்று இருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் விக்ரமன் மனைவி கடந்த ஐந்து வருடங்களாக படுத்த படுக்கையாக உள்ளார்.
    • சொத்துக்களை விற்றுதான் மருத்துவ செலவை பார்ப்பதாகவும் ஜெயப்பிரியா தெரிவித்திருந்தார்.

    1990-ம் ஆண்டு வெளியான 'புது வசந்தம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்ரமன். அதன்பின்னர், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வானத்தைப்போல, பிரியமான தோழி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார். இவர் கடைசியாக கடந்த 2014- ஆம் ஆண்டு வெளியான 'நினைத்தது யாரோ' திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதன்பின் இயக்கத்தில் இவர் பெரிதாக நாட்டம் காட்டவில்லை.


    விக்ரமன் - ஜெயப்பிரியா

    விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையின் தவறான அறுவை சிகிச்சை காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக கால்களை கூட அசைக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். மேலும், இவரை கவனித்துக் கொள்ளவே விக்ரமன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டதாகவும் தன் சொத்துக்களை விற்றுதான் மருத்துவ செலவை பார்ப்பதாகவும் ஜெயப்பிரியா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இயக்குனர் விக்ரமனின் மனைவியை மருத்துவ குழுவுடன் நேரில் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் விக்ரமன், "என் மனைவிக்கு முதுகில் செய்த தவறான அறுவை சிகிச்சையினால் அவரால் நடக்க முடியவில்லை. என் நிலைமையை விளக்கி ஒரு சேனலுக்கு பேட்டியளித்திருந்தேன்.


    இதனை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனையை சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து 25-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் என் மனைவியை நேரில் வந்து பார்த்து பரிசோதித்து நல்ல சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்" என்றார்.

    • கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நலன் காக்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
    • தமிழ்நாடு அரசு தாய் சேய் நலன் காக்க இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

    சென்னை:

    வாழ்வின் முதல் ஆயிரம் நாட்கள் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் 5,694 பெண்களுக்கு ரூ.50 லட்சம் நிதி உதவியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

    பின்னர் இந்த திட்டம் குறித்து அவர் கூறியதாவது:-

    கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நலன் காக்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

    குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் உதவும் வகையில் கர்ப்பிணி தாய் மார்களுக்கான நிதியுதவி திட்டம் தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று 5294 கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் 3 தவணை வழங்கப்பட உள்ளது.

    கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்குகின்ற ரூ.5000 நிதி உதவி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் அடுத்த ஆயிரம் நாட்களில் தேவைப்படும் ஊட்டச்சத்தை பூர்த்தி செய்ய வழங்கப்படுகின்றது. தமிழ்நாடு அரசு தாய் சேய் நலன் காக்க இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் மருத்துவ குறியீடுகள் கணக்கிடப்பட்டு 14 மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, ரத்தசோகை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் உள்ள 23 வட்டாரங்களில் உள்ள 118 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு வருடத்தில் 37 ஆயிரத்து 200 குழந்தைகள் பிறக்கின்றன. 2 வருடங்களுக்கு 74 ஆயிரத்து 400 குழந்தைகள். இக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்திற்காக கர்ப்பம் தரித்தஉடன் முதல் தவணையாக 20, 28, 38-வது வாரங்களில் ரூ.1000, 6-வது மாதம் 4ம் தவணை ரூ.500 24வது மாதம் 7-வது தவணை ரூ.500 என மொத்தமாக கர்ப்ப காலத்தில் ரூ.3000, 2 வயது வரை குழந்தை வளரும் பருவத்தில் ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    குழந்தை இறப்பு விகிதத்தில் இந்தியாவில் ஆயிரத்திற்கு 28, தமிழ்நாடு அளவில் ஆயிரத்திற்கு 13, மகப்பேறு இறப்பு விகிதம் இந்திய அளவில் ஒரு லட்சத்திற்கு 97, தமிழ்நாடு அளவில் ஒரு லட்சத்திற்கு 54 என்ற விகிதத்தில் உள்ளது. இதனை மேலும் குறைத்திடும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளார். இதற்காக ரூ.38.20 கோடி ஒதுக்கியுள்ளார்.

    இத்திட்டத்தின் மூலம் கர்ப்ப கால ரத்த சோகை தடுக்கப்படும். அதே போன்று பேறுகால குழந்தைகள் எடை சீரானதாக இருக்கும். 2 வருடத்திற்கான குழந்தை வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும். அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்யப்படும். எடை குறைவான குழந்தைகள் பிறப்பதை முற்றிலுமாக தவிர்த்திட முடியும். கர்ப்ப கால பிரச்சினைகளை மேம்படுத்திட முடியும். அனைத்து தாய் சேய் நல குறியீடுகளை மேம்படுத்துதல், பிரச்சினைகள் உள்ள கர்ப்பிணி தாய்மார்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களை காத்திட முடியும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் இந்த நிதியுதவிக்கான பணத்தினை கட்டாயம் தாய்மார்களின் ஊட்டச்சத்தையும் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் மேம்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இத்திட்டம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களை தமிழ்நாடு முழுவதிலும் கண்டறிந்து அவர்களுக்கான சிறப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது.

    இதுவரை 8,163 தாய் மார்கள் இத்திட்டம் மூலம் பயன்அடைந்துள்ளனர். இன்று 5,294 தாய்மார்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ரூ.1000க்கான நிதி உதிவி வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    • தமிழகத்தில் 47ஆயிரத்து 938 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில் 12,787 பேர் ஒப்பந்த செவிலியர்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் அரசு துணை சுகாதார மையங்களில் 8,713 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தவிர மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கும் செவிலியர்கள் பணியிடங்கள் உள்ளது.

    இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 2250 கிராம செவிலியர்களை தேர்ந்தெடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு 2,250 பேரை தேர்ந்தெடுக்க தற்காலிக அடிப்படையில் ரூ.19,500 ஊதிய விகிதத்தில் நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இதன்படி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வயது, கல்வித் தகுதி, பொது தகவல், தகுதி நிபந்தனைகள் பிற முக்கிய வழிமுறைகள் போன்ற விவரங்கள் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் www.mrb.tn.gov.in இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் 47ஆயிரத்து 938 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில் 12,787 பேர் ஒப்பந்த செவிலியர்கள்.

    இந்த ஒப்பந்த செவிலியர்கள் 2016, 2017 மற்றும் 2020-ம்ஆண்டு கால கட்டங்களில் பணிக்கு வந்தவர்கள்.

    அவர்களுடைய பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஒப்பந்த காலம் முடிந்தவுடன் அவர்களை மீண்டும் மாவட்ட மருத்துவ சங்கம் மூலம் 14,000 ரூபாயில் இருந்து மூலம் 18,000 ரூபாயாக உயர்த்தி அவர்களுடைய சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ளார்கள்.

    இந்நிலையில் செவிலியர்களுக்கு தற்போது 499 நிரந்தர செவிலியர்கள் காலியிடங்கள் உள்ளது. அந்த 499 செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை ஒப்பந்த செவிலியர்களையே நிரப்பிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

    13.10.2023 அன்று கலந்தாய்வு மூலம் மூப்பு நிலை மற்றும் சுழற்சி மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தற்போது எம்.ஆர்.பி. மூலம் ஒப்பந்ததார செவிலியர்கள் கால முறை ஊதியத்தில் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு 2,65,834 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது, அதில் 6,430 நபர்களுக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இந்தாண்டு இதுவரை 2,42,743 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் 4,524 நபர்களுக்கு டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 15 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகள் சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும் கொசு புழு வளரிடங்களான மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருட்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்) போன்றவைகளை கண்டறிந்து கொசு புழுக்கள் இருப்பின் அழித்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக 318 மருத்துவ அலுவலர்கள், 635 செவிலியர்கள், 954 கொசு ஒழிப்புக்கென நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,324 ஒப்பந்த பணியாளர்கள் என ஆக மொத்தம் 4,231 மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சென்னையில் இன்று மட்டும் 54 நபர்கள் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக இருதய தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பொதுமக்கள் சத்தான பழங்கள் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி:

    உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற நடைபயிற்சி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் முன்பாக இருந்து தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோநகர், ரோஜ்பூங்கா, படகு குழாம் ஆகிய பகுதிகளை கடந்து மீண்டும் அதே வழியில் மாதா கோவில் முன்பு வந்து நிறைவடைந்தது.

    இதில் தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், நகர போலீஸ் டி.எஸ்.பி.சத்யராஜ், மாநகராட்சி அலுவலர்கள் அதிகாரிகள் மண்டல தலைவர்கள் ராமகிருஷ்ணன், விஜயகுமார், பச்சிராஜ் உள்ளிட்ட மாநகர கவுன்சிலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதய மருத்துவ பிரிவு சார்பாக உலக இருதய தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி சிவக்குமார் தலைமை வகித்தார். இயக்குனர் செல்வவிநாயகம் உறைவிட மருத்துவர் சைலஸ் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் முன்னிலை வகித்தனர், பேரணியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினர்.

    அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-

    முதலமைச்சர் உத்தரவுபடி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மக்கள் நலன்கருதி இதுபோன்று 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இங்கு இந்த கடற்கரை சாலை இருபுறமும் கடல்நீருடன் மரங்கள் அடங்கிய ரம்மியமான பகுதியாக உள்ளது. இந்த திட்டத்தை அக்டோபர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சியை மேற்கொள்கிறார்.

    இரண்டாயிரம் ஆண்டில் உலக இருதய தினம் கடைபிடிக்கப்பட்டு இன்று 23-ம் ஆண்டு நடைபெறுகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் நடைபயிற்சி தற்போது உள்ள சூழ்நிலையில் அவசியம் தற்போது குறைந்த வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது. நமது உணவு பழக்கவழக்கங்களிலும் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். நோயற்ற வாழ்வு தான் நமக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழக கிராமப்புறங்களில் 10999 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாரடைப்பு மரணத்தை தவிர்க்கும் வகையில் முதல்கட்ட சிகிச்சையாக 14 வகையான மாத்திரைகள் வழங்கப்பட்டு பல உயிர்கள் காக்கப்படுகின்றன. இதுபோன்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த துறை முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு செயல்படுகிறது

    நான் இங்கு 8 கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டேன். ஆனால் நான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து நடந்து 13½ கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டு உள்ளேன். தினசரி இதுபோன்று நான் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

    இதனால் மூன்று வேளையும் பிடித்த உணவுகளை சாப்பிடுகிறேன். பொதுமக்கள் சத்தான பழங்கள் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். புரோட்டா, பர்கர் உள்ளிட்டவைகளை அதிகம் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும் தினசரி நடப்போம் நலம் பெறுவோம் என்று கூறினார்.

    அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மக்கள் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் செயல்படும் முதலமைச்சரின் சிறப்பான பணிகளின் மூலம் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் வகையில் நடைபயிற்சி அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. அதே போல் இதயம் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெறுகிறது. உணவு வகைகள் கட்டுப்பாட்டுடன் சத்தான உணவுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். என்று பேசினார். பின்னர் பசுமையை வலியுறுத்தி மரக்கன்று நட்டனர்.

    • பள்ளி குழந்தைகள் மத்தியில் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • கண்களில் அழுக்கு வெளியேறி இமைப்பகுதிகள் ஒட்டிக் கொள்ளும்.

    சென்னை:

    சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பாதித்து எழும்பூர் கண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பருவகால மாற்றத்தின் போது மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் பரவுவது வழக்கமானது. தற்போது மெட்ராஜ் ஐ வேகமாக பரவுகிறது. கடந்த ஜூலை மாதம் 78 பேரும், ஆகஸ்டு மாதம் 248 பேரும் பாதிக்கப் பட்டிருந்தனர். இந்த மாதம் இதுவரை 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    பள்ளி குழந்தைகள் மத்தியில் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு வருகிற 16-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை இலவச கண்பரிசோதனை செய்யப்படும்.

    * கண் வலி மற்றும் கண் சிவந்து போகும்.

    *கண்களில் நீர் வழியும்.

    *கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுதல்.

    *கண்களில் அழுக்கு வெளியேறி இமைப்பகுதிகள் ஒட்டிக் கொள்ளும்.

    *இது பருவநிலை மாறுபாட்டினாலும் ஒரு விதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் வரக்கூடியது.

    *ஒருவரை நேடியாக பார்ப்பதினால் வராது.

    *குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் மற்றவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது அதனால் அவர்கள் உபயோகிக்கும் பொருட்கள் அல்லது கருவிகளை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது.

    *கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும்

    *கண் மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று சொட்டு மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.

    *சுயமாக மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.

    கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும்.

    நல்ல ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய்ப் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடையவைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×